இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வைணவமும் தமிழும்
35
- கொல்லையஞ் சாரல் குருந்தொசித்த மாயவன்
- எல்லைநம் ஆனுல் வருமேள் அவன்வாயில்
- முல்லையந் தீங்குழல் கேளாமே தோழி (3)[1]
இவற்றுள் கண்ணன் கன்று வடிவாக வந்த வத்சலாசுரனைக் கொண்டு விளாமர வடிவாக நின்ற கபித்தாசுரன்மேல் எறிந்து இருவரையும் கொன்றசெய்தியும், திருமால் வாசுகி என்னும் அரவத்தைக் கயிறாகவும், மந்தரமலையை மத்தாகவும் கொண்டு திருப்பாற்கடலைக் கடைந்த செய்தியும் காட்டையடுத்த மலைச் சாரலில் கண்ணன் மகளிரைமறைப்பதற்காகக் குருந்தமரத்தை வளைத்த செய்தியும் குறிப்பிடப்பெற்றிருப்பதைக் காணலாம். இவையெல்லாம் ஆயர்குலப் பெண்கள் கூடிக் கண்ணனுடைய குழலிசையைப் புகழ்ந்து பாடிய பாடல்கள்.[2]
ஆயர்குலப் பெண்கள் கூடிக் கண்ணனுடைய குழலிசையைப் புகழ்ந்து பாடும் பாடல்கள் இனிய சுவையைத் தருவதுடன் திருமால் வழிபாட்டுச்சிறப்பினையும் உணர்த்து கின்றன. முன்னிலைப் பரவலாக வரும் பாடல்கள் இவை :
- வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்
- கடல் வண்ணன் பண்டொருநாள் கடல் வயிறு கலக்கிளையே
- கலக்கியகை யசோதையார் கயிற்றால் கட்டுண்கை
- மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே.
- அறுபொருள் இவன் என்றே அமரர்கணம் தொழுதேத்த
- உறுபசியொன் றின்றியே உடல்கடைய உண்டனையே
- உண்டவாய் களவினால் உறிவெண்ணெய் உண்டவாய்
- வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே