இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
44
வைணவமும் தமிழும்
பிரபந்தம் | பாசுரத் தொகை | |
---|---|---|
14. | முதல் திருவந்தாதி | 100 |
15. | இரண்டாம் திருவந்தாதி | 100 |
16. | மூன்றாம் திருவந்தாதி | 400 |
17. | நான்முகன் திருவந்தாதி | 96 |
18. | திருவிருத்தம் | 100 |
19. | திருவாசிரியம் | 7 |
20. | பெரிய திருவந்தாதி | 87 |
21. | திருவெழுக்கூற்றிருக்கை | 1 |
22. | சிறிய திருமடல் | 1 |
23. | பெரிய திருமடல் | 1 |
ஆக, பிரபந்தங்கள் 10க்குப் பாசுரங்கள் | 593 |
இவற்றுள் 14,15,16 எண்களுள்ளவை முறையே முதலாழ்வார்களான பொய்கையார், பூத்த்தார், பேயார் ஆகியோராலும்; 17 எண்ணுள்ளது திருமழிசைப்பிரானாலும்; 18,19,20 எண்களுள்ளவை நம்மாழ்வாராலும், 21,22,23 எண்களுள்ளவை திருமங்கையாழ்வாராலும் அருளிச்செய்யப் பெற்றவை.
தொகுதிபற்றிய குறிப்புகள்: நாதமுனிகள் தாம் ஏற்படுத்தின திருமொழி-திருவாய்மொழித் (பகல் பத்து இராப்பத்து) திருநாளில் முதலாயிரத்தையும. திருவாய் மொழியையும் தேவகானத்தில் ஏறிட்டுச் சேவித்தார் என்றும், இயற்பாவை இயலாகச் சேவித்தார் என்றும் “கோயிலொழுகு"