பக்கம்:வைணமும் தமிழும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

வைணவமும் தமிழும்



இவளது ஈடுபாட்டின் மேன்மையைக் கண்டு "இவள் நப்பின்னைப் பிராட்டியோ? பூமிப் பிராட்டிதானோ? பெரிய பிராட்டிதானோ? என்ன ஆச்சரியமோ? இவள் நெடுமால் என்றே கூவா நிற்பாள்; முன்னதாகவே அவன் நின்று இருந்து உறையும் தொலைவில்லி மங்கலம் என்னும் திவ்விய தேசத்தைத் தலையால் வணங்குவாள். அந்தத் திருத்தலத்தின் திருநாமத்தைக் கேட்பதுவே சிந்தையாக இரா நிற்பாள்" என்கின்றாள் தோழி.

ஆழ்வார் கிருட்டினாவதாரத்தில் ஈடுபட்டிருக்கும் தன்மையை நோக்குங்கால் “நப்பின்னைபிராட்டிதானோ?” என்று நினைக்கத் தோன்றும்; வராகப் பெருமான் திறத்தில் ஈடுபட்டிருக்கும் தன்மையைநோக்குங்கால் “பூமிப் பிராட்டி தானோ?” என்று நினைக்கத் தோன்றும்; இராமாவதாரத்தில் இவள் கொண்டுள்ள ஈடுபாட்டை நோக்கினால் “சீதாப்பிராட்டிதானோ?" என்று நினைக்கத் தோன்றும்.

'பிறந்திட்டாள்' இங்கு ஈடு : “அவர்கட்கு இவள் படி (ஒப்பு) இல்லாமையாலே அவர்கள் ஒப்பு அன்று; போகமெல்லாம் வாழுகைக்கு இவள் ஒருத்தி பிறந்தாளோ? என்னுமாம்”,

இப்பதிகம் முழுவதையும் நோக்கினால் தலைவி எம்பெருமான்மீது ஈடுபட்டிருக்கும் (அநந்யார்ஹத்துவம் திறத்தைக் காணமுடிகின்றது. பிரணவத்தில் உகாரத்தின் பொருள் அநந்யார்ஹத்துவம் என்பது ஈண்டு நினைவு கொள்ளத்தக்கது.