பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


இன்பத்தை நினைவூட்டி, அதே
பூரிப்பால் கோரிக்கை எழுப்பிடத் தூண்டிய-
புதிய மறுமலர்ச்சி சமுதாயச் சிற்பி அவர் !

இளமையின் அந்தியில் இருக்கும் கிழத்திடம்,
கிளியை ஒப்படைப்பது திருமணமல்ல !
சடங்கின் சட்டத்தில் பெண்ணை மாட்டுதல்,
கண்ணை இழந்தவன் செயலென்று
சொன்னவர் புதுவைக் கவிஞர்!

வீழ்ச்சியுற்ற தமிழகம் எழுச்சி கொள்ள -
அதன் மடமையைப் பிளக்கும்
பாறை வெடிகுண்டானார்!
பிறமொழி ஆதிக்கம் சிறகெடுத்துப் பறந்தால்-
வேலென எழும்பிய அவருடைய
வெம்மைச் சொற்கள்-
வளைத்த வானத்தை
நிமிர்த்தும் வாக்கியங்கள்!
படுத்த நிலத்தை எழுப்பும் யாப்பு,

அன்புக்கு அவர் தந்த விளக்கம்-
அருளுக்கும் - அது பொருந்தும்.
நல்ல குடும்பத்தைச் சொல் விளக்கேற்றி,
கல்லாமை கழித்து, கல்வி நட்டு,
அறிவைத் திறக்கும் திறவுகோல்
புதுவைக் குயில்!

வந்துபோகும் நிலவல்ல - கவிஞரது பாடல்!
வரம்போடு வீசும் தென்றல்! - வெள்ளுவா பொழிவு! பாரதியாரைப் பற்றி, அவர்
பாடியதைப் போல எவரும்
இனி பாட முடியாது!
அவ்வளவு புகழாரங்களையும் -
புதுப்புதுச் சொற்களால் ஆட்சி செய்து,
ஆசானுக்கு ஆரமணிந்தவர்!

73