பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


சுயராஜ்ஜியம் பெறுவதற்கு என்னை நான் தகுதியாக்கிக் கொள்கிறேன் என்பதற்காகத்தான்!

ஒவ்வொரு சுயராஜ்ஜியக் குடிமகனுக்கும் தன் கையே தனக்குதவியாக இருக்கவேண்டும் என்பதற்குச் சான்றாக, நான் அந்தப் பணிகளை எல்லாம் செய்கிறேன்! புரிகிறதா இப்போது? என்று காந்தியண்ணல் விளக்கினார்.

இந்தியத் திருநாட்டில் ஒரு தூய்மையான, சுத்தமான, சமுதாயம் உருவாக வேண்டும் என்பது என் ஆசை ! அதற்குக் கழிவறைச் சுத்தம் ஓர் ஆரம்பப் பாடம் என்று கருதுகிறேன் என்றார்!

பத்திரிகை நிருபர் ஒருவர், ஒருமுறை காந்தியடிகளை, "இந்தியாவின் வைஸ்யராயாக நீங்கள் ஆக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார்

அதற்கு அந்தப் பெருமான், "நான் தோட்டி வேலை செய்வேன்” என்று நறுக்கென்று பதில் அளித்தார்.

என்ன காரணத்தாலோ மருத்துவராக வேண்டிய மகாத்மா, வழக்கறிஞராக ஆகிவிட்டார்.

காந்தியடிகளாருக்கு அருகிலேயே ஒருவன் இருக்க விரும்பினால், அவனுக்கு ஏதாவது ஒரு நோய் வர வேண்டும் என்று அவரது சபர்மதி நண்பர்கள் பேசிக் கொள்வார்களாம்!

தென்னாப்பிரிக்காவில் காந்தி இருந்தபோது, ஒரு கர்ப்பிணிப் பெண் பிரசவ வேதனைப்பட்டாள்.

இங்கே நர்சு யாருமில்லை. வெள்ளைக்கார நர்சு ஒருத்தி கறுப்பு நிற கர்ப்பிணிக்கு மருத்துவம் பார்க்க மறுத்தாள்.

இப்போது என்ன செய்தார் கருணாமூர்த்தி காந்தி?

தன்னிடமுள்ள ஒரு பிரசவம் பார்ப்பது பற்றிய நூலகப் புத்தகத்தை மீண்டும் படித்துவிட்டு, அந்தப் பெண்ணுக்கு காந்தியடிகளே பிரசவம் பார்த்தார்-தாயும் ஆனவரைப் போல!

காந்தியடிகளுக்கு தன்னம்பிக்கை அதிகம். அதனால்தான் எல்லாவிதமான சோதனைகளையும் ஏற்கும் உள்ள உரமும் மனத் திறமும் இயற்கையாகவே அவரிடம் அமைந்து விட்டது.

53