பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


மாசு மருவற்ற அந்த இளம் பிஞ்சுகள், பிற்காலத்தில் கொலைகாரர்களாக மாறுவதை - எந்தக் காலத்தினோடு சேர்ப்பது? எந்த வினைகளில் ஏற்று மன்னிப்பது?

எந்தத் தெய்வத்திடம் போய் மாரடிப்பது? எந்தத் தத்துவம் இதற்குப் பதில்கூறும்?

அமெரிக்கக் குடியரசுத் தலைவரான ஆபிரகாம் லிங்கன் இருந்த இடத்தையாவது கென்னடி நிரப்பினார் - ஒருவாறு ஆறுதலுற்றோம்!

இராபர்ட் கென்னடி இருந்த இடத்தையாவது மார்ட்டின் லூதர் கிங் நிரப்பினார் - எப்படியோ தேறுதலுற்றோம்!

ஆனால், மக்கள் தொண்டன் கிங் இருந்த இடத்தை நிரப்ப - ஆள் யார்? உலகம் தேம்பி அழுகின்றது, விக்கி விதிர்ப் படைகின்றது.

அதனைப் போலவே, ஆபிரகாம் விங்கனைக் கொன்ற கொலைக்காரன் ஜான் வில்கியூஸ் பூத் இடத்தை கென்னடியைக் கொன்ற ஆஸ்வால்டு நிரப்பினான்!

ஆஸ்வால்டு இடத்தை, மார்டின் லூதர் கிங்கைக் கொன்ற ஜேம்ஸ் எர்ல்ரே என்ற கயவனொருவன் நிரப்பினான் - இல்லையா?

நல்லவர்கள் இருந்த இடத்தை நிரப்புவதற்கு - நல்லவர்களும் வருகின்றனர். கெட்டவர்கள் இருந்த இடத்தை நிரப்ப - கெட்டவர்களும் வருகின்றனர்.

காலம் இந்த இரு பிரிவையும் கவனம் வைத்துக் கொண்டு தான் வருகின்றது. இதற்கு முடிவுதான் என்ன?

நல்லவர்களை நாசமாக்குவதற்குத் தீயவர்கள் வருவது இயல்பு - இயற்கை என்றால்.

இந்த உலகம், ஒரு பரிபூரண - களங்கமற்ற எல்லாம் வல்ல ஓர் இறைவனால் படைக்கப்பட்டது என்பது உண்மைதானா?

மார்டின் லூதர் கிங் இறப்பால் - கலங்கிய கண்களோடு - மனித நேய மாண்போடு - இதை நாம் எப்படி நம்புவது?

என்னுடைய உயர்ந்த சக்தி, பஞ்ச பூத வேரில் கட்டப்

86