பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


பாவாணர் அவர்கள் தீர்ப்பு கூறுவார்.

திருவள்ளுவர் கிறித்தவரா? இல்லையா? என்ற தீர்ப்புக்காக, தமிழ்நாடு காத்திருக்கிறது.

இந்த மாநாட்டில் உங்களுடைய திருக்குறள் அறுவை சிகிச்சையால் விளைந்த அனுபவத்தைக் கேட்க, ஆய்வை அறிய ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேலான அறிஞர் பெருமக்கள் கூடியிருக்கின்றார்கள். இதற்கான விளம்பரங்கள் 'முரசொலி” "தினமணி " நாளேட்டில் வந்துள்ளதை அறிவீர்கள்.

'திருக்குறள் ஆய்வு மாநாடுக்காக அச்சடிக்கப்பட்டு வெளி வந்த அழைப்பு இதழ் நிகழ்வுகளைப் படிக்கின்றேன்.

'ஐந்தவித்தான் யார்? என்ற ஆய்வு நூலுக்கு திருக்குறள் பீடம் அழகரடிகள் அவர்கள் அணித் தலைவராகவும், டாக்டர் சி.பாலசுப்பிரமணியம்,எம்.ஏ.எம்.லிட், பிஹெச்.டி, பண்ணாராய்ச்சி வித்தகர் பேராசிரியர் பி.சுந்தரேசனார், சமண மதத்தைச் சேர்ந்த ஜீவபந்து டி.எஸ்.புரீபால், பேராசிரியர் வி.பா.க. சுந்தரம் எம்.ஏ., பேராசிரியை ப. தமிழ்ச்செல்வி எம்.ஏ., ஆகியவர்கள் அணி உறுப்பினர்களாக அமைந்து-ஐந்தவித்தான் யார்? என்ற நூலை ஆய்வு செய்திருக்கின்றார்கள்.

'வான் எது? என்ற ஆய்வு நூலுக்கு பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார் எம்.ஏ., எல்.டி, விசாரத் (இந்தி) அவர்கள் - அணித்தலைவராகவும், டாக்டர் என்.சுப்பு ரெட்டியார் எம்.ஏ., பி.எச்.டி, டாக்டர் ஞானப்பிரகாசம் எம்.ஏ, பி.எச்.டி, பேராசிரியர் லெ.ப.கரு.இராமநாதன் செட்டியார், பேராசிரியர் கே.எஸ். மகாதேவன் எம்.ஏ, தத்துவக் கவிஞர் குடியரசு ஆகியோர் அணி உறுப்பினர்களாகக் கூடி, வான் எது? என்ற நூலை ஆய்வு செய்திருக்கின்றார்கள்.

'நீத்தார் யார்? என்ற ஆய்வு நூலுக்கு அணித் தலைவராக டாக்டர் வ.சுப. மாணிக்கம் எம்.ஏ., எம்.ஓ.எல். பி.எச்.டி, அவர்களும் உறுப்பினர்களாக, டாக்டர் மு.கோவிந்தசாமி எம்.ஏ., எம்.லிட், பி.எச்.டி. புலவர் மு. சண்முகம் பிள்ளை, பேராசியர் பொன்.ஆ. சத்தியசாட்சி எம்.ஏ.எம்.ஓ.எல், பேராசிரியர் சரசுவ, இராமநாதன் எம்.ஏ, பேராசிரியர் இ.சு.முத்துசாமி எம்.ஏ., பி.டி. ஆகியோர் கூடி, "நீத்தார் யார்?' என்பது பற்று ஆய்வு செய்துள்ளார்கள்.

149