பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


மயங்கின்தோல் எழுத்தாளன் ஆன என்னைக்
கொண்டுவந்து கவியரங்கில் நிறுத்தி விட்டார்
கூவாயோ குயிலேநீ என்றும் கேட்டார்
அண்ணாவே, உன் அறிவின் துளிஎ னக்கு
அருளாயோ பொருளோடு பாடு தற்கு!

உனைவிற்றுக் காசாக்கத் தெரிய வில்லை
ஒரத்தில் நிற்கவைத்தார் பொறுத்துக் கொண்டேன்
தனைவிற்றுத் தன்மானம் விற்று உள்ளச்
சாட்சியினைக் கடைத்தெருவில் விற்றுப் பல்லோர்
எனைபோல இங்குண்டோ என்று கேட்கும்
இழிநிலையைப் பார்த்தாலே விழிபாழாகும்
அனைத்தாகி நீயிருக்க எனக்கேன் அச்சம்?
அடிவைத்தேன் கவிதையிலே வாழ்த்தாய் அண்ணா!


வேறு

கவியரங்கத் தலைவருக்கு வணக்கம்


கொழித்தெழில் தமிழைத் தின்று
கொஞ்சிடும் கிளியின் பேச்சை
விழுங்கிடும் செவிகள் கொண்ட
வ.உ.சி. குறளை நோக்கி
முழுமையை நயந்து நின்றார்
சந்தனம் வழிய நாறும்
எழுதிய உரையால் நாட்டை
எனதென எடுத்துக் கொண்டார்.

ஒழுகியத் தேனை உண்டு
இன்னிசை உளறும் தும்பி
விழுந்தபின் அங்கோர் பக்கம்
விழியினைக் குவித்துத் தூங்கும்
வழக்கத்தை இவரும் கொண்டார்
வ.உ.சி. வடித்த தேனை
குழையவே குடித்த வாயான் இளந்தமிழ்ச் சிறகுத் தும்பி.

179