இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோயில் எனப் பெறும் சிதம்பரம் சென்று வழிபடுகின்ற நாவுக்கரசப் பெருமான், ஆடவல்ல பெருமானுடைய வடிவத்தில் ஈடுபட்டு, அப்பெருமானுடைய அபயகரத்தில் ஈடுபடுகின்றார். அந்தக் கரம் அடியார்களைப் பார்த்து, "எப்போது வந்தாய்” என்று கேட்பது போல் இருக்கின்றது என்று பாடுகின்றார். ஒன்றியிருந்து நினைமின்கள் உம்தமக் கோர் கூனமில்லைக் கன்றிய காலனைக் காலாற் கடிந்தான் அடியவர்க்காச்