92
ஆண்டாள்
என்று நாராயணனைப் பாடிப் பரவசமடைந்த நிலையினை இளங்கோவடிகளும் இனிமை ததும்ப எடுத்தோதுகின்றார்.
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தங் கண்ணென்ன கண்ணே
என்றும் அவர் மேலும் கூறுதல் காண்க.
மேலும் கண்ணன் அவதாரம் செய்தது ஆயர்பாடியிலே அன்றோ'. கண்ணன் 'ஆயர் தம் கொழுந்தல்லவா? எனவே அவன் மகிழ்ந்திருப்பதால் அவனைச் சுற்றிலும் இசை எழும்புகின்றது; ஆடல் நிகழ்கின்றது. எங்கும் செல்வவளம்; எங்கும் இன்ப வெள்ளம். இதனையே பெரியாழ்வாரும் -
ஓடுவார் விழுவா ருகந்தா லிப்பார்
நாடு வார்நம்பி ரானெங்குற் றானென்பார்
பாடு வார்களும் பல்பறை கொட்டநின்று
ஆடு வார்களும் ஆயிற்றாய்ப பாடியே.
ஆயர்பாடியிலுள்ள கன்னியர் கண்ணனோடு களித்திருந்த செயல் முதியோர் சிலருக்குச் சீற்றத்தை வரவழைத்தது. 'இச்செயலால் குலம் பழிபூணும்' என்று அவர்கள் கொண்டனர். எனவே இரு திறத்தாரையும் பிரித்து வைத்தனர். கன்னியரி நிலவறையில் அடைபட்டனர்; கண்ணன் யசோதையின் கட்டுப்பாட்டில் அகப்பட்டான். கண்ணனைக் காணாத கன்னியர் கலங்கினர்; கையற்று நெஞ்சழிந்தனர். அம்மகளிர் வயிறெரிந்தால் அந்நாட்டில் மாரிவளம் குன்றாதா? 'குலப்பெண் வயிறெரிந்தால் கொடிச்சீலையும் பற்றியெரியும்’