பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவரையும் பெற்ற ஆன்மா 123 தார் சொக்கேசர் என்று முன்பு கண்டோமே, ஆம்! அதே சொக்கேசர் இங்கே தாய்ப் பன்றியாக உருவெடுத் துப் பாலூட்ட வருகின்றார். இதைப் பரஞ்சோதியார், 'ஏன மென்பறழ் உறுகண் நோய்க்கு இரங்கினார் இச்சை ஆன அன்புதந்து அத்துயர் அகற்றுவான். ஈனற மான அன்புடைப் பேடையின் வடிவெடுத்து - . - அயரும் கான வன்பறழ் கலங்கு அஞர் கலங்க நேர் வந்தார்' (59) என்கிறார். ஆம்! அக்குழவிகளின் துன்பம் கலங்கி ஒடத் தான் வந்து, தாயாகி முலை ஈந்து காத்து வளர்த்து அவற்றை அமைச்சர்களாகவும் ஆக்குகின்றார் அம்மை e9/LJLJff. இத்தகைய இறையுளத்தைப் பெற்ற குழந்தையாகிய ஆன்மாக்களைப் பாதுகாக்கும் பரமனின் கருணையைஅம்மை அப்பரின் அருள் நெறியை எண்ணி-நம்மையும் எண்ண வைக்கிறார் பரஞ்சோதியார். 'இம்மை இப்ப வத்து அன்னையாய் - - இனிவரும் பவமும் செம்மை செய்து அசேதனத்தையும் சேதனம் செய்தார் எம்மை எப்பவத்தாயினும் எனைப்பல - உயிர்க்கும் அம்மை அப்பராய்க் காப்பவர் அவரலால் - - எவரே' (63)