இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
50
ஆடும்
அழைப்பை ஏற்று உள்ளே வந்தது, அருணாசலம் அல்ல; ‘வாத்தியார்’ ராஜநாயகம்!
அவர் முகமெல்லாம் சிரிப்புப் பூத்துக் கிடந்தது. இதழ்கள் சிரித்தன. வெற்றிலைக் காவி ஏறிய பற்கள் பளிச்சிட்டன. கண்கள் சிரித்தன.
படுக்கையில் சாய்ந்து கிடந்த அல்லி, பதறி எழுந்தாள். ஆடையைச் சரிப்படுத்திக் கொண்டு, ஒடுங்கி நின்றாள்.
‘வாத்தியார்’ அறைக் கதவைச் சாத்தி விட்டு அவளைப் பார்த்தார். சிரித்தார். “என்ன அல்லி, எப்படி இருக்கிறே?” என்று கேட்டபடி, முன்னே நகர்ந்தார்.