இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
230 அழியா அழகு
"கண்ணிலும் உளை:ே தையல்
கருத்தினும் உளைநீ; வாயின் எண்ணினும் உளரீ' ' என்று அதனே இராமனிடம் கூறுகிருன்.
மதனன், வெறும் அவயவப் பிழம்பாகிய வடிவைக் கண்டு சீதையை எழுதமாட்டாமல் திகைத்தான். இராமன், வடிவையும் பண்பையும் கண்டு இன்புற்ருன். அதுமனே வடிவ வளத்தைக் காணுமல் பண்புருவப் பொலிவைக் கண்டு வணங்கினன். வடிவைக் காணுவிட்டாலும் பண்பு களால் கண்டு கொள்ளலாம் என்பதை அப்படிக் காணும் அகக் கண்ணேப் பெற்ற அநுமன் உணர்த்திவிட்டான்.
1. சுந்தர திருவடி தொழுத 30.