163 கட்டுரைக் கொத்து
வில்லில் நாண் பூட்டியதைக் கண்டிலர். ஆல்ை, வில்து எடுத்ததைக் கண்டனர். அஃது ஒடிந்த ஓசையைக் கேட்டனர்' என்பது,
திருக்காவலூர்க் கலம்பகம் : இது திருக்காவலூர் அடைக்கல மாதாவின்மீது பாடப்பட்ட நூல் ஆகும். அடைக்கல மாதா எசுப்பெருமானின் அன்னேயாவார். இருக்காவலூர் காவிரியாற் றின் வடகரையில் உள்ள ஏலாக்குறிச்சி என்ற சிற்றுாரில் உள்ளது. இதனை இக் கலம்பக நூலில் வரும்,
கனே பூத்த சோனட்டுக்
காவிரியின் வடகரைமேல் சினே பூத்த கிழல்பொழில்வாய்ச்
சிங்கநெடுங் கொடிநிழற்றும் திருக்காவ லுர்அகத்துத்
திகழ்ஒளிவாய் மணிக்கோயில் அருட்காவல் இயற்றினமை
அளிப்பதுகின் தயைஆமோ
என்னும் பாடலில் காணலாம்.
பார்மேவும் பழிப்ேபப்
பகர்த்தடங்காப் பரிவுள்ளிச் சிர்மேவும் திருவுளத்தைத்
தெரிந்தமார் உளம்பனிப்ப உருவில்லான் உருவாக
உலகில்ஒரு மகன் உதிப்பக் கருவில்லாக் கருத்தாங்கிக்
கன்னித்தாய் ஆயினேயே
என்பதும் இக்கலம்பக நூலில் வரும் பாடலே.