மணமகளின் மிடுக்கு
19
பட்ட காலம் இது. அவன் பெண்விட்டாருக்குக் ‘குலாம்’ ஆகிவிடுகிறான்.
உண்ண வா மருமகனே?
மருமகன் சாப்பிடுகிறான். சாப்பிடும்போது மெல்லத் - தன் விருப்பத்தை வெளிப்படுத்துகிறான்.
பெண்ணை அனுப்பாயோ
மாமியாருக்கு இப்போது கோபம் வருகிறது. தன் பெண்ணுக்கேற்ற செல்வமும் செளகரியங்களும் அவன் வீட்டில் இல்லை என்பதை எடுத்துச் சொல்லத் தொடங்குகிறாள். “உங்கள்வீட்டில் தலைக்கு எண்ணெய் இல்லையாம்! சீவிச் சிக்கறுக்கச் சீப்பில்லேயாம்! பூசிக்கொள்ள மஞ்சள் இல்லையாம்! இப்படித் தரித்திரம் பிடுங்கித் தின்னும் வீட்டில் எங்கள் செல்வப் பெண் எப்படி வந்து இருப்பாள்? அவள் இங்கே எப்படி இருந்தாள் தெரியுமா? ஆஹா வாரி முடித்துக் கொண்டை போட்டுக்கொண்டு வாசலிலேவந்து நின்றாளானால் வீதிமுழுவதும் அவள் அழகு சுடர்வீசும். இந்த சந்திலுள்ளார் எல்லோரும் அவள் அழகிலே மயங்கி அடிமையாகி விடுவார்கள். அவள் மேனி சந்தனத்தை வென்றுவிடுமே! பூஞ்சரத்தைத் தோற்கடிக்குமே!”-இந்தக் கருத்தையே பாட்டாகச் சொல்கிறாள்.
எண்ணெய் இல்லை சீப்பும் இல்லை
இளந்தேங்காய் மஞ்சள் இல்லை.
வாரி முடித்துக் கொண்டு.
வத்திருப்பாள் சந்தினிலே.
சந்தை விலைமதிப்பாள்
சந்தனத்தைத் தோற்கடிப்பாள்.
பூவை விலைமதிப்பாள்.