பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210


களத்தை நான் பறிகொடுத்த பாவம் பத்தாதா? முப்பத்தெட்டு வாட்டி உன்னைச் சோறு உண்ணச் சொல்லிக் கெஞ்சிக் கூக்தாடிப்பிட் டேனே?-இன்னமுமா உம் மனசு இளகல்லே? -எனக்குப் பசி காதடைக்குதே?-நீ ஒரு பிடி சாதம் சாப்பிட்டாக்க, நான் ஒரு படி சாதம்

சாப்பிடுவேனே, ராசாத்தி தங்கமே ...

நீ அந்தச் சூன்யக்காரி:மீட்ைசியோட குடிசை மண்ணிலே என்னை எப்ப கண்டியோ, அப்பவிலேயிருந்து, உன்னைப் பெற்ற அன்பு அப்பன்கிட்டே முகம் கொடுத்து ஒரு வார்த்தை கூடப் பேசாமல், வைராக்கியமாய் இருக்கிறீயே, தாயே?...நான் ஜனிச்சதிலேருந்து முடிஞ்ச மட்டுக்கும் சுத்தவாளியாய் இருந்துக்கிட்டு வந் திருக்கிற என்ன மாரியோ, காளியோ, இல்லே, கறுப்பரோ, சிகப்பரோ ஏன் தான் இப்படிச் சோதிக்கிருங்களோ ?-நான் அவங்க சொத் தையா கொள்ளையடிச்சேன்?-மகளே பவளக் கொடி முப்பத்தொன்பதாவது தடவையாகவும் சத்தியப் பேச்சாய்ச் சொல்விப்பீடுறேன் 1எனக்கம் அந்த மூதேவி மீனாட்சிக்கும் அன்றை

லேருந்து இன்றைய வரையிலும் யாதொரு சொந்த பந்தமும் கிடையவே கிடையாது ! பெற்ற உன்ைேட அப்பனையே நீ நம்பாமல் இருந்தால், பின்னே என்னுேட அந்தஸ்தும் கவுரமும் செல்லாத மலேயா காசாக ஆகிப் புடாதா?...எழுந்திருச்சு வா , எ ன க் கு த் தலைக்கு மேலே சோலி கிடக்குது. கருக்கலில்ே உனக்கும் உன் ஆசை அத்தான் முத்துவுக்கும் கல்யாணம் நடக்கப் போகுதே, மகளே !-உன் அம்மாவோட வைர அட்டிகையை நீ போட்டுப் பார்க்கவேணுமா? இந்தச் சங்க