பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154


ஒன்றை நினைத்தேன். அபலைப் பெண்ணுக்குக் கொழுகொம்பான அப்பாவையே அளித்துவிட எண்ணினேன்.

நானும் அவளும் உண்டோம்.

சங்கீத அப்பியாசம் குறித்துத் தந்தையின் யோசனையைக் கேட்டுச் சொல்வதாகத் தெரிவித்தேன். பத்து ரூபாய்த்தாள் ஒன்றையும் நீட்டினேன். நாளைக்கு அவள் வந்து விடுவாள்!

“ஆமா, உங்க பேரு”

“நீலாட்சி”

மணவினை அழைப்புக்களில் விலாசம் எழுதுவதில் முனைந்திருந்தார் அப்பா.

சீதளக் கதிர்கள் புள்ளிக் கோலம் இட்டுக் கொண்டிருந்தன.

“அப்பா.”

“என்னம்மா”?

‘உங்க உடம்பு ரொம்ப இளைச்சுப் போச்சு அப்பா,’ சிணுங்கல் இருமல் ஒன்றை முதலில் வெளிப்படுத்திய பின், மெல்லிய சிரிப்பைக் கொட்டினர் அவர். “அதாலே இப்ப என்னம்மா?”.. என்றார்.

“நீங்க என்னப்பா இப்படிக் கவலை இல்லாமப் பேசுறீங்களே?”

“எங்கவலயெல்லாம் உம்மேலேதாம்மா! நீ சந்தோஷமா இருந்தா, அதாம்மா எனக்குச் சந்தோஷம், நிம்மதி! நீ குடியும், குடித்தனமுமா இருக்கிறதை உன்னோட புகுந்த வீட்டிலே வந்து பார்த்து மகிழ்ந்து திரும்புற