30
“சிலம்பணி கொண்டசெஞ் சீறடி பங்கன் தன் சீராடியார்
என்னும் அடிகள் திருவாசகத்தில் திருப்பூவல்லிப் பகுதியில் வரும்,
“வணங்கத் தலைவைத்து வார்கழல்வாய் வாழ்த்தவைத்
திணங்கத்தன் சீர் அடியார் கூட்டமும் வைத்தெம்
என்னும் அடிகளை நினைவுபடுத்துகின்றன.
“கருளார் கருங்குழல் வெண்ணகைச் செய்வாய்த்
துடையிடையீர்
என்னும் ஆற்றாதுரைத்தல் துறையை உணர்த்தும் கோவையார்ப் பாடல்.
“அருளா தொழிந்தால் அடியேனை அஞ்சேல் என்பா
ரார்இங்குப்
பொருளா என்னைப் புகுந்தாண்ட பொன்னே பொன்னம்
என்னும் திருவாசகக் கோயில் மூத்த திருப்பதிகத்தின் சொல்லையும் பொருளையும் தழுவி நிற்பதை உணரலாம்.
“மைத்தழை யாநின்ற மாமிடற் றம்பல வன்கழற்கே
மெய்த்தழை யாநின்ற அன்பினர் போல
என்பது திருக்கோவையாரில் இரக்கத்தோடு மறுத்தல் என்னும் துறையைச் சார்ந்த பாடல். இதில் விதிர் விதிர்த்து என்று பெய்யப்பட்ட தொடர்,
“மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்துன் விரையார்
கழற்கென்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி
என்னும் திருவாசகத் திருச்சதக முதற்பாட்டில் மிளிர்வதைக் காண்க.
மாணிக்கவாசகர் தம்மை நாயினும் கடைப்பட்டவன் என்று அடிக்கடி கூறிக்கொள்வதைத் திருவாசதத்தில் பல இடங்களில் காணலாம்.