பக்கம்:ஈட்டி முனை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4, இவை தேவை

வீழ்ச்சியுறும் தமிழகத்தில் எழுச்சி வேண்டும்!
விசை ஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்!
சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத்
தொகையாக எதிர்நிறுத்தித் தூள்தூளாக்கும்
காழ்ச்சிந்தை மறச்செயல்கள் மிகவும் வேண்டும்!
கடல்போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்!}}

(பாரதிதாசன்)

நாட்டுக்குத் தேவை—

ஏட்டைக் கெடுக்கும் கதைகளல்ல. உள்ளத்தைக் கள்ளமாக்கும் கற்பனைகளல்ல. ஆண் பெண் காம நாடகமல்ல. மிருகவெறியரின் கள்ள நட்பை காதல் என வர்ணம் பூசி, உளச் சித்திரம் எனக் கூறும் சொல் ஜாலங்கள் அல்ல.

காகிதத்தைக் கறுப்பாக்கும் காளான்கள் தேவையில்லை, அறிவைக் களங்கமாக்கும் அளப்புகள் தேவையில்லை, சோர்வு நீங்காத சொர்க்கக் கனவுகள் தேவையில்லை. பித்தலாட்டங்கள் தேவையில்லை.

கற்றோர் ஒரு சிலர், சிலரில் சிலரே எழுத முன் வந்திருக்கிறார்கள். மற்றவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக குமாஸ்தா வேலையோ, ஆபீஸ் உத்தியோகமோ எதுவோ பார்த்து, நாட்கள் பின் நாட்கள் கழியும் என்று வாழ்க்கை நடத்துகின்றனர்.

மண்ணோடு மண்ணாகக் கிடப்போர் ஆயிரமாயிரம் மக்கள். உயிர் வாழ வேண்டும் என்ற ஆசையால், இதர பயத்தைப் போக்குவதற்காக, மூடக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/25&oldid=1535510" இலிருந்து மீள்விக்கப்பட்டது