பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

சாயங்கால மேகங்கள்

பூமிக்கு உணர்ச்சி நரம்புகள் புடைத்தன. அடக்கமாக இருக்க முயன்றான். கல்லூரி காம்பவுண்டிற்குள் கலகம் விளைவிக்கலாமா கூடாதா என்ற தயக்கம் வேறு தடுத்தது. தந்திரமாக நடந்து குமரகுருவை அடக்க விரும்பினான்.

“அப்போ உங்களிடத்தில் தனியாப் பேசணும்னாப் பொம்பளைங்க கூப்பிட்டாத்தான் வருவீங்களாக்கும்...”

“ஷ்யூர்! நிச்சயம் வருவேன்.”

“அப்படியானால் முறைப்படி அழைப்பு வரும்! வாருங்கள். சத்திக்கலாம் என்று பூமி கூறிவிட்டுப் புறப்பட்டான்.

“அதுசரி! நீ யாரு என்னன்னு சொல்லாமலே போறியேப்பா?” என்று மீண்டும் உற்சாகமான ஏகவசனத்திலேயே பூமியை மடக்கினான் குமரகுரு.

“இப்போது வேண்டாம்! அப்புறம் நீயே தெரிந்து கொள்ளலாம் வாத்தியாரே” என்று அதே ஏக வசனத்தில் அவனுக்குப் பதில் கூறிவிட்டு அங்கிருந்து விரைந்தான் பூமி.


20

தீமையைத் துணிந்து செய்கின்றவனை விட அதை எதிர்க்கத் துணியாது தயங்கி நிற்கிறவன் தான் இன்று மிகவும் மோசமானவன்.


ந்தக் கல்லூரியிலிருந்து திரும்பிச் சென்ற பூமி அன்று மாலையிலேயே சித்ராவையும் தேவகியையும் மீண்டும் சந்தித்தான். நடந்ததைச் சொன்னான். அதைக் கேட்ட சித்ராவுக்கும், தேவகிக்கும் ஓரளவு ஏமாற்றமாகக் கூட இருந்தது.

“நீங்கள் போய்ச் சந்தித்துப் பேசியதும், உங்களைப் பார்த்ததுமே அந்தப் பையன் திருந்தி வழிக்கு வந்துவிடுவான் என்று நினைத்தோம்."