பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டரடிப் பொடிகள் 223 பாயுர்ே அரங்கம் தன்னுள் பாம்பனைப் பள்ளி கொண்ட மாயனார் திருகன் மார்பும் மரகத வுருவும் தோளும் து தாமரைக் கண்களும் துவர் இதழ்ப் பவள வாயும் ஆய சீர் முடியும் தேசும் அடியரோர்க் (கு) அகலல் ஆமே97 (மாயனார்.ஆச்சரிய சக்தியையுடைய எம்பெருமான் ; திருதன் மார்பு. பிராட்டி வாழ்கின்ற அழகிய மார்பு; மரகதம் உருவு-பச்சை நிறமேனி; துவர். சிவந்த முடி-திருமுடி; தேசு-தேஜஸ்; அடியரோர் ஸ்வருப ஞானமுடைய தாசர்கள்; அகலில். இழித்தல்.1 என்று காட்டுவார். இங்கனம் தனிக்கிடந்து அரசு செய் கின்றான் தாமரைக்கண்ணன் எம்மான் (18) என்கின்றார். இங்ங்ணம் கண்வளருகின்றபடியை நெஞ்சினால் அளவிட்டுக் கறமுடியாது’ என்கின்றார். (7) ஆழ்வாரின் இறையநுபவம் : அரங்கமா கோயில் கொண்ட கரும்பினைக் கண்டு கொண்டு எனது இரண்டு கண்களும் பார்த்தவண்ண்மாய் மகிழ்ச்சி அடையும் பாங்கைச் சொல்ல முடியாது’ என்கின்றார். நின்நாமம் கற்ற, ஆவவிப்புடைமை கண்டாய்! அரங்கமாநகருவானே" (1) என்கின்றார். இதுகாறும் யமபடர்கட்கு அஞ்சிக் கிடந்த ஆழ்வார், திருநாமத்தைக் கொண்ட பலத்தாலே அவர்கள் தலைமீது அடியிட்டுத் திரிகின்றோம்" என்று பெருமிதத்துடன் கூறுகின்றார். அச்சுதா! அமரர் ஏறே! ஆயர்தம் கொழுந்தே! என்று நாவினால் நவிற்றும்போது நான் பெறும் சுவையே எனக்கு போதும்; இந்திரலோகம் 27. டிெ, 20