பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206


(தொகையறா)

அறிவிருக்கும் அன்பிருக்கும் பண்பிருக்கும் சிலரிடம்!
அழகிருக்கும் பணமிருக்கும் பகட்டிருக்கும் பலரிடம்!

பாட்டு

இது தெரியும்!
அது தெரியாது!
ஏழடுக்கு மாளிகையில் இருக்கிற பேர்வழிக
எத்தனையோ தப்புத்தண்டா பண்ணுவாங்க!
ஏழை எளியவங்க இல்லாத காரணத்தால்
ஏதோ சிறு தவறு பண்ணுவாங்க!


ஜாலி மைனர்கள் விசிறி மடிப்பிலே
கிழிசல் ஒரு கோடி இருக்கும்!-தொழி
லாளி துவைச்சு உடுத்தும் உடையிலே
தையல் பல ஓடி இருக்கும்!


கனதனவானின் நெஞ்சில் எந்நாளும்
கபடம் பொறாமை எனும் அழுக்கிருக்கும்!
கள்ளம் அறியாத பாட்டாளி மேனியில்
உள்ளபடி வேர்வை அழுக்கிருக்கும்!
(இது)
அல்லி பெற்ற பிள்ளை-1959
இசை : K. V. மகாதேவன்