பக்கம்:அறிவியல் வினா விடை-இயற்பியல்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

கண்ணாடியில் 20o செ இல் 5,000 மீட்டர் வினாடி!

6. வெற்றிடத்தில் ஒலிபரவுமா?

பரவாது. அது பரவ ஒர் ஊடகம் தேவை. திங்களில் காற்று இல்லாததால் ஒருவருக்கொருவர் பேசுவதைக் கேட்கமுடியாது. ஒலிக்கருவிகள் மூலமே கேட்க இயலும்.

7. சோனார் என்றால் என்ன?

ரேடார் போன்றது. இதன் பொருள் ஒலியால் வழியறிதலும் எல்லை காணலும். இது ஒரு கருவி மட்டுமல்லாது துணுக்கமும் ஆகும்.

8. இக்கருவியின் பயன் யாது?

இது நீருக்குக் கீழுள்ள பொருள்களை எதிரொலித்தல் முறையில் கண்டறியப் பயன்படுகிறது.

9. ஒலிப்பகுப்பு என்றால் என்ன?

மீஒலிக் கதிர்வீச்சால் மூலக்கூறுகளைச் சிதைத்தல்.

10. ஒலிமானி என்றால் என்ன?

இழுத்துப் பொருத்தப்பட்ட கம்பிகளின் அதிர்வுகளைப் பற்றி அறிய உதவுங் கருவி.

11. இசைமானி விதிகள் யாவை?

1. இழுத்துப் பொருத்தப்பட்ட கம்பியின் இழுவிசை(t) மாறாநிலையில், அதன் அதிர்வெண் (n) கம்பிநீளத்திற்கு (l) எதிர்வீதத்தில் இருக்கும். அதாவது nl என்பது மாறா எண்.

2. இழுத்துப் பொருத்தப்பட்ட கம்பியின் நீளம் (l) மாறா நிலையில், அதன் அதிர்வெண் (n) இழுவிசையின் இருமடிமுலத்திற்கு நேர்விதத்தில் இருக்கும். அதாவது என்பது மாறா எண்.

3. இழுத்துப் பொருத்தப்பட்ட கம்பியின் இழுவிசை (t) மாறாநிலையில், குறிப்பிட்ட அதிர்வெண்ணுக்குக் கம்பி நீளம் அதன் அடர்த்தியின் இருமடி மூலத்திற்கு () எதிர்வீதத்தில் இருக்கும். அதாவது T என்பது மாறாஎண்.

12. கட்டிட ஒலிஇயல் என்றால் என்ன?