இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கனிகள்
31
136. கடவுளைத் தன்னில் காணாதவனுக்குக் கடவுள் இல்லை.
டால்ஸ்டாய்
137.மக்களிடையே கடவுளை நாடுக.
நோவாலிஸ்
138.நானில்லையானால் கடவுளும் இருக்க முடியாது.
எக்கார்ட்
139.கோவிலில் வைத்துக் கும்பிடும் கடவுளை மனிதனே சிருஷ்டித்தான். அதனால் மனிதன் தன்னைப் போலவே கடவுளையும் படைத்திருக்கிறான்.
ஹெர்மீஸ்
140.கடவுள் கோவில் கட்டும் இடத்தில் எல்லாம் சாத்தானும் ஒரு கோவில் கட்டிவிடுகிறான். அதுமட்டுமா? அவன் கோவிலுக்கே அடியார்களும் அதிகம்.
டீபோ
141.மனிதனுக்கு எத்துணைப் பைத்தியம்! ஒரு புழுவைச் சிருஷ்டிக்க முடியாது. ஆயினும் கணக்கில்லாத கடவுளரைச் சிருஷ்டித்துக் கொண்டேயிருக்கிறான்.
மான்டெய்ன்
142.கடவுள் தகுதியுடையவர்க்குத் தாட்சண்யம் காட்டுவார். தகுதியற்றவர்களே நியாயத்தை மட்டும் வழங்குவர்.
பிளாட்டஸ்