இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12
6. உயிரி தொழில் நுட்பத் துறைக்காக விருது பெற்ற இந்தியப் பெண் அறிவியலார் மூவர் யார்? எப்பொழுது பெற்றனர்?
- 1. டாக்டர் பாம்ஜி, அய்தராபாத் டாங்கேரியா. அறநிறுவனம் ரூ. 1,00,000.
- . டாக்டர் இலக்குமி, டாக்டர் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையம், சென்னை, ரூ. 50,000.
- 3. டாக்டர் குரோவர், இந்தியத் தேசியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம், கர்னால், ரூ.50,000. இம்மூவரில் இவரே இளையவர். இவர்கள் விருது பெற்ற ஆண்டு 2001.
7. உயிரி தொழில் நுட்பவியலின் வாழ்க்கைப் பயன்கள் யாவை?
- 1. நடைமுறைக்கேற்ற வேளாண்மையை மேற்கொள்ளல். புதிய பயிர் வகைகளை உருவாக்கல்
- 2. உலகளாவிய உணவுப் பாதுகாப்பைப் பெறுதல்; பயிர்களைப் பாதுகாத்தல்.
- 3. மனித உடல் நலத்தைப் பெருக்கல்.
- 4. உழவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றுதல்.
- 5. தாவரங்களிலிருந்து தடுப்பு மருந்துகளை உண்டாக்கலாம் - டிஎன்ஏ ஆவைன்.
- 6. நுண்பெருக்கம் மூலம் குறிப்பிட்ட தாவரங்களைப் பெரிய அளவில் பெருக்குதல்.
- 7. ஊட்ட உணவு வழங்குதல்.
8. உயிரி தொழில் நுட்பவியல் எவ்வாறு சிறப்பிக்கப் படுகிறது?
- புத்தாயிரம் உயிரி தொழில் நுட்ப ஆண்டு எனச் சிறப்பிக்கப்படுகிறது.
3. தண்டு
1. தாவர அச்சு என்றால் என்ன?
- தாவர மைய அச்சு. இதில் தண்டும் வேரும் இருக்கும்.