திருச்செந்தூர்' திருப்புகழ் உரை 197 84 நிறைந்து கச்சொடு (ரவிக்கையோடு) கூடிய, கும்பம் போன்ற, குளிர்ந்த, சந்தனக் கலவை அணிந்த கொங்கைகளை உடைய (பொது) மகளிருடைய அவலகூடிணமான வஞ்சகம் உள்ள ஆடல்களிலே அலைப்புண்டு, பொழுதை வீணாக இழந்து, போய்விட்டது மானம் என்பதை அறியாத - கீழ்மகனாகி, மனது கட்டுக்கு அடங்காத ஐம்(பெரும்) பாதகங்களைச் செய்தவனாய், தருமமே செய்யாமல், அடியோடு இறந்து போனவர்களுடைய வாழ்வைக் கண்டு(ம்) ஆசையில் அழுந்துகின்ற (எனது) மயக்கம் திரும்படி: காரணம், காரியம் என (நிகழ்கின்ற) நிகழ்ச்சிகளில் (உள்ள ஆராய்ச்சிகள்) எல்லாம் ஒழிந்து, நான் (நான்) என வரும் (ஆணவக்) கொழுப்பு நீங்கித் தியானத்துடன் இருந்து, (பிராண) வாயு உடலூடே இயங்கி (ஒடி), மூக்கின் மீது இரண்டு விழி (முனைகளும்) பாய - காயம், வாக்கு, மனம் (மனம், வாக்குக், காயம்) என்னும் மூன்றும் ஒரு. வழிப்பட அன்பை உடலுள்ள அளவும் விடாமல், உனது அழிவற்ற திருத்தாள்களை நினைந்து (அத்திருவடிகளின்) காட்சியைப் பெறுவதற்கு மிக்க தவத்தைச் செய்கின்ற யோகிகள் என்ன (நான்) விளங்கும்படி அருள்புரிவாயே!
பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/213
Appearance