இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அல்லி என்ன நிலைமையில் இருக்கிருளோ? தன் தந்தையிடம் எந்த அளவு முயற்சி செய்திருக்கிருளோ என்ற எண்ணம் அன்று முழுவதும் அலமோதிக்கொண் டிருந்தது. பிற்பகல் நான்கு மணியளவில் தேநீர் அருந்தி விட்டுத் தெருப்பக்கம் வந்து நின்றேன். என்னுல் நம்பவே முடியவில்லை : எதிர்பாராதவிதமாக அல்லியின் தங்கை -சிறுமி ஓடிவந்து, அக்கா கொடுத்துவிட்டு வரச் சொல்லிற்று என்று கூறி ஒரு கடிதத்தை என் கையில் கொடுத்துவிட்டுத் திரும்பிப் பாராமல் ஓடோடியும்
விட்டாள்.