74
பன்னிரு திருமுறை வரலாறு
'கோல மாய நீண்மதிற் கூடல ல வாயிலாய்
பாலனுய தொண்டு செய்து பண்டுமின்று முன்னேயே நீலமாய கண்டனே நின்னேயன்றி நித்தலும் சீலமாய சிந்தையிற் றேர்வதில்லே தேவரே ’ எனவும்,
- பவருத்தில் வந்து பயனுற்ற பண்பன் ” எனவும்,
- பண்டு நான் செய்த வினேகள் பறையவோர் நெறி அருள்
பயப்பார் ’’
எனவும்,
கான லுலா வியோத மெதிர்மல்கு காழி
மிகுபந்தன் முந்தியுணர ஞான முலாவுசிந்தை யடிவைத் துகந்த
நறையூரின் நம்பன் ’’
எனவும் வரும் தொடர்களால் தெளிவாகக் குறிப்பிட் டுள்ளார். இக்குறிப்புக்களால் ஆளுடைய பிள்ளையார் பண்டைப் பிறவியிலேயே சிவனடிக்குத் தொண்டு பட்டுப் பாசத் தொடர்பினே அறவே நீக்கியவரென்பது நன்கு பெறப்படும்.
இங்ங்ணம் திருஞானசம்பந்தப் பி ஸ் ளே ய | ர் முன்னேப் பிறப்பிலேயே பாச நீக்கம் பெற்றவராயினும் தவவேதியராகிய சிவபாதவிருதயரும் அவர் மனேவி யார் பகவதியாரும் ஆற்றிய சிவவழிபாட்டின் காரண மாகவும் இந்நிலவுலகத்தில் இறைவனுக்கு இடை பருது தொண்டு புரியவேண்டுமெனப் பிள்ளேயார் முன்னேப் பிறவியிற் கொண்டிருந்த பெருவிருப்பங் காரணமாகவும் சிவபெருமான் ஆளுடைய பிள்ளே யாராகிய அவரை இவ்வுலகிற் பிறப்பித்தருளினன் என்பது,
பண்டு திருவடி மறவாப் பான்மையோர் தமைப் பரமர் மண்டுதவ மறைக்குலத்தோர் வழிபாட்டின் அளித்தருள’ என வும்,