18
சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்
யமும் செய்து நாகரிக வாழ்க்கைக்கும் வாணிக வளர்ச்சிக்கும் துணைபுரிந்தனர். கன்னார்கள் செம்பில் பாத்திரங்களும் கருவிகளும் செய்து சமுதாய - வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை எல்லாச் சாதியினருக்கும் அளித்தனர். இவர்களனைவரும் சமுதாயத்திற்குத் தேவையான உழைப்பை, சமுதாயத்திற்கு அளித்து வந்தனர்.
ஆனால் மேல் சாதியார் இவர்களைத் தங்களுக்கு ஊழியம் புரியும் கடப்பாடுடைய சூத்திரர்களாக மதித்தனர். உழைப்பை இழிவாகக் கருதிய பிராமணரும் பிறருழைப்பில் வாழும் நிலக்கிழார்களும் இவர்களைத் தங்களுக்கு அடிமைகளாக, உழைப்பதற்காகவே பிறந்து வாழ்வதாகக் கருதினர்.21 அதற்காகவே பல கருத்துக்களை உருவாக்கினர்.
உழைப்பாளிகளான பஞ்சகருமார்கள் இக்கொடுமைகளை எதிர்த்தனர். பல விதங்களில் அநீதியை எதிர்த்துச் சாதி சமத்துவத்திற்காகப் போராடினர்.
இப்போராட்டங்களின் போது கருத்துக்களையும் கொள்கைகளையும், பழைமையான சாதி சமத்துவச் சிந்தனைகளிலிருந்தும் புதுமையான தருக்கங்களிலிருந்தும் உருவாக்கிக் கொண்டனர்.
மேற்குறிப்பிட்ட வழக்கு, ஆசாரிகள் குலத்தில் திருமணத்தை நடத்தி வைக்க பிராமணர்களுக்கு உரிமையுண்டா அல்லது ஆசாரிகள் குலத்தைச் சேர்ந்த பெரியவர்களுக்கு உரிமையுண்டா என்ற பிரச்சினை பற்றி எழுந்தது. இதனைப் பற்றிச் ‘சித்தூர் அதலாத்துக் கோர்ட்டுத் தீர்ப்பு’ என்ற நூல் பின்வருமாறு கூறுகிறது: