26
ராசீ
அவள் பெயரிலிருந்து தான் அமைந்ததாமே! அப்படி ஒருத்தி இருந்தது உண்மை தானே” என்று கேட்டேன்.
“நூறு ஆண்டுகள் வாழ்வது எப்படி என்று ஒரு நூல் தமிழில் இருக்கிறதே தெரியுமா” என்று கேட்டேன்.
“மூவாயிரம் ஆண்டுகள் நிச்சயமாக வாழ்ந்திருக்க முடியாது” என்றேன்.
“விவிலியத்தைக் கூட உங்களால் நம்ப முடியாதா?” என்று கேட்டார்.
“தெய்வத்தை எதிர்க்க முடியும்; சமய நூலை எதிர்க்க முடியாது” என்று ஒப்புக் கொண்டேன்.
“ஆதிமனிதன் ‘அரை’ உடையில் இருந்தானா? ‘கால்’ உடையில் இருந்தானா?” என்று கேட்டு வைத்தேன்.
“அவன் ஆதிமனிதனாக இருக்க முடியாது” என்கிறார்.
“அவன் அரை மனிதனாகத் தான் இருந்திருப்பான் என்றேன்” அவருக்கு விளங்கவில்லை.
“ஆடை இல்லாதவன் அரை மனிதன் தானே” என்றேன்; அவர் சிரித்தார்.
திடீர் என்று அடுத்த பிறவிக்குப் பாய்ந்தோம்.
சென்ற ‘பிறவியில்’ அவரிடம் டிரைவராக இருந்தவன் இந்தப் பிறவியில் வேறு ஒர் இடத்தில் வேலை செய்கிறான் என்று சொன்னார்.
“எங்கேப்பா! இந்தப் பக்கம்வர்ரதே இல்லை”