விந்தன்
21
"ஏன் இந்தக் கண்ணீர்?" என்றார் அவர்.
"நீங்கள் துடைப்பதற்காக! இன்று மட்டுமல்ல; என்றும் துடைப்பதற்காக!” என்றேன் நான்.
"துடைப்பேன் லலிதா, துடைப்பேன்!” இன்றும் துடைப்பேன்; என்றும் துடைப்பேன்!” என்று சொல்லிக் கொண்டே, அவர் என் கண்ணீரைத் துடைத்தார்.
அவருடைய கையைப் பற்றி நான் என்னுடைய கண்களில் ஒத்திக்கொண்டேன்; என்னுடைய கையைப் பற்றி அவர் என்னைத் தமக்கருகே உட்கார வைத்துக் கொண்டார்.
ஒரு கணம் இருவரும் மெளனமாக இருந்தோம், ம று க ண ம் எதிர்த்தாற்போலிருந்த திராட்சைக் கொத்தை நோக்கி அவருடைய கை நீண்டது. "இல்லை; இனி அது உங்களுடைய வேலையில்லை!” என்று சொல்லிக்கொண்டே, அதில் ஒன்றைத் திருகி எடுத்து நான் அவரிடம் கொடுத்தேன்.
“வாழ்க்கை ‘ஒன் வே டிராபிக்’காக இருக்கக் கூடாது. லலிதா!” என்று சிரித்துக்கொண்டே, அவரும் ஒன்றைத் திருகி எடுத்து என்னிடம் கொடுத்தார்.
பரஸ்பரம் சாப்பிட்டு முடித்த பின் பாலை எடுத்து அவரிடம் நீட்டினேன்.
பருகினார்!
ஆனால், "பால் பருகப் பிறந்தவர்கள் ஆண்கள் மட்டுந்தான்!” என்று அவர் எல்லாப் பாலையும் பருகி.
அ.-2