22
அன்பு அலறுகிறது
விடவில்லை; பாதியைப் பருகிவிட்டுப் பாதியை என்னிடம் நீட்டினார்.
நானும் பருகினேன்!
எச்சில் கலந்தது; இதயமும் கலந்தது.
இந்தச் சமயத்தில,"ஜன்னலை மூட மறந்துவிட்டாயேடி" என்றொரு குரல் வெளியேயிருந்து கேட்டது.
திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன்; திறந்திருந்த ஜன்னலுக்கு வெளியே காந்தா நின்று கொண்டிருந்தாள்!
"சரிதான், போடி!" என்று சிரித்துக்கொண்டே சென்று அதைச் சாத்திவிட்டு வந்தேன்.
"நம்முடைய கல்யாணத்தில் உன்னுடைய மாமா ராமையாவுக்கு மட்டுந்தான் விருப்பம் இருக்குமென்று நினைத்தேன்!” என்றார் அவர்.
"இல்லை; எனக்கும் விருப்பந்தான்!” என்றேன் நான்.
"அத்தை நாகம்மாளுக்கு?”
"விருப்பமே!"
"சரி, உன் தோழிகளுக்கு?"
"விருப்பமில்லை!”
"ஏன் ?"
"உங்களை நான் கல்யாணம் செய்துகொள்ளவில்லையாம்; உங்களுடைய பணத்தைத்தான் கல்யாணம் செய்து கொண்டேனாம்!”
"உண்மைதான்!” என்றார் அவர்.