பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97


நம் நாட்டில் அஜந்தா ஒவியத்திற்கும் சித்தன்ன வாசல் ஒவியத்திற்கும் அழியாப் புகழுண்டு. இதைப் பின்னணியாக வைத்துக் கதை பின்னியிருப்பது தமிழ் நாட்டின் வரலாற்றுச் சிறப்பை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது.

கலைத் துறையில் தமிழ்நாடு மேலும் பல முன்னேற்றங்களைப் பெற்றுத் தமிழகத்தின் பெருமையைத் தரணி வியந்து பாராட்டத்தக்க அளவில் தமிழ் நாட்டின் வருங்காலம் இருக்க விழைகிறேன்.

வகைப்பாடு : கலை - நாட்டிய நாடகம்
10-6-68-இல் சென்னையில் நடைபெற்ற வாழ்நங்கை நாட்டிய நாடகத்திற்குத் தலைமையேற்று ஆற்றிய உரை.
25. நாட்டின் மீன் வளம்

இந்தியப் பேரசின் உணவுத்துறை அமைச்சர் திரு. ஜகஜீவன்ராம் மீண்டும் தமிழகத்திற்கு வந்துள்ளது கண்டு நான் பெருமகிழ்வடைகிறேன். இங்குத் துவங்க இருக்கும் புதிய அமைப்பு நமது நெடுநாளைய குறையைத் தீர்த்து வைக்கிறது.

நம் நாட்டில் ஏராளமான மீன்வளம் இருந்தும் அதனைத் தக்கமுறையில் பயன்படுத்தவில்லை என்னுங்குறை இருந்து வருகிறது. மீன்வளத்தைப்

F–13