உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை-2.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

நற்றிணை தெளிவுரை



206. கேண்மை அறிந்தாளோ?

ணை

பாடியவர் : ஐயூர் முடவனார். $.26001: ...... தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.

துறை :

[(து.வி.) தலைவன் தலைவியரின் நீடித்த களவு ஒழுக்கத்தை நிறுத்தித் தலைவனை அவளை வரைந்து கொள்ளும் முயற்சிக்குத் தூண்டவேண்டும் எனக் கருது கின்றாள் தோழி.. தலைவனுக்காகத் தலைவி குறியிடத்தே காத்திருக்கும் சமயம், அவன் வந்து, தான் அகலுதலை நோக்கி ஒருசார் மறைந்து நிற்றலை அறிந்தவள், அறியாதா ளாகக் காட்டித் தலைவிக்குக் கூறுவதுபோல அமைந்த செய்யுள் இது. கேட்கும் தலைவன் வரைந்து மணத்தொடு கொள்ளற்கு முற்படுவான் என்பது இதன் பயன்.]

'துய்த்தலைப் புனிற்றுக்குரல் பால்கொள்பு இறைஞ்சித் தோடுதலைப் பிரிந்தன எனல்' என்றும்,

துறுகல் மீமிசைக் குறுவன குழீஇச் செவ்வாய்ப் பாசினம் கவருமென் நவ்வாய்த்

தட்டையும் புடைக்கக் கவணும் தொடுக்கென

5

எந்தைவந் துரைத்தன னாக, அன்னையும்

நன்னாள் வேங்கையும் அலர்கமா இனியென

என்முகம் நோக்கினள் எவன்கொல் தோழி?

சென்ற கென்னுங்கொல் செறிப்பல் என்னுங்கொல்?

கல்கெழு நாடன் கேண்மை

அறிந்தனள் கொல்லஃ தறிகலன் யானே!

10

தெளிவுரை : தோழீ! துய்யினைத் தலையிலே கொண்ட மிக்க இளமையான தினைக் கதிர்க் குலைகள் பால் கொண்டு தலைசாய்த்து, மூடியிருந்த தோடுகள் பிரிந்துபோயின வாயின் என்றும்; துறுகற் பாறைகளின் மேலாகத் தினைக்கதிர்களைக் கொய்துபோகும் பொருட்டாகக் கூடியிருந்த சிவந்த வாயை யுடைய பசிய கிலயினங்கள் தினைக்கதிர்களைக் கவர்ந்து போதலும் நேருமென்றும்; அவற்றை ஓட்டும் பொருட் டாகப் புனத்திடைச் சென்று தட்டையையும் புடைப் பீராக, கவண் கற்களையும் தொடுத்து எறிவீராக என்றும்; எம் தந்தை வந்து தாயிடத்தே உரைத்தனன். அதனைக் கேட்டாளான எம் அன்னையும், திருமண நன்னாளைக் காட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/28&oldid=1640754" இலிருந்து மீள்விக்கப்பட்டது