ఐఉగా ن م م (b Sہرr h w (6) (گامه پr _2 37 ოჯიი ತಿ'; ぬうr 2ru ©o كای நற்றிண்ை தெளிவுரை விளக்கம் : இனிதே என்றது, எம்மூர் நின் ஊர் போன்றே இன்னது கருதாத செவ்வியது என்றதாம். அன்னையும் பிறரும் நீவரின் ஐயுருர் என்பாள், தமர் தமர் அறியாச் சேரி என்றனள். பிறர் பிறர் அறிதல் யாவது என்றது, அலர் உரைத்துப் பேசு வாரும் எவரும் இல்லையென்று கூறியதாம். இதல்ை, அவனை இரவு வேளையிற் கானற் சோலைக்கு அஞ்சாது வருமாறு கேட்டுக்கொள்ளுகின்ருள் தோழி. - பயன் : இரவுக்குறி நேர்தல் மூலம் வரைவு வலியுறுத்தல் என்று கொள்க; இரவுக்குறி வாயாது என்பதற்கு உப்பு விளைப் போர் காத்திருக்கும் நிலைமை கூறினள். 332. குவளை குறுவர்! பாடியவர் : குன்றுார் கிழார் மகனர் கண்ணத்தனர். திணை : குறிஞ்சி. துறை : 1. பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி களவுக் காலத்து வற்புறுப்ப, தலைவி கூறியது: 2. பொறை எதிர் மறுத்தது உம் ஆம். ((து-வி.) 1. தலைமகன் பிரிவினல் மெலிந்த தலைமக வரிடம், நாள் தவருதே அவன் வந்து நின்னைத் தழுவியும் நீதான் மெலிதல் எதேைலா? எனத் தோழி கேட்கின்ருள். அவன் வரும் வழியினது கொடுமைய்ை நினைந்து மெலிவேன்' என்கிருள் தலைவி. அத்தலைவியின் கூற்ருக அமைந்த செய்யுள் இது. 2. தலைவியின் மெலிவுக்குத் தோழி வருந்தித் தலைவனைப் பழிக்க, அது பொருத தலைவி தன் நிலையைத் தோழிக்கு உரைக் கின்றனள்.) - இகுளே தோழி! இஃது என்னெனப் படுமோ 'குவளை குறுநர் நீர்வேட் டாங்கு. நாளும் நாள்உடன் கவவும், தோளே தொன்னிலை வழீஇய நின்தொடி எனப் பல்மாண் உரைத்தல் ஆன்றிசின் நீயே விடர்முகை 5 ஈன்பினவு ஒடுக்கிய இருங்கேழ் வயப்புலி இரைநசைஇப் பரிக்கும் மலைமுதற் சிறுநெறி தலைநாள் அன்ன பேணலன், பலநாள், ஆர் இருள் வருதல் காண்பேற்கு r யாங்கு ஆகும்மே, இலங்கிழை செறிப்பே? 10