உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை-2.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

நற்றிணை தெளிவுரை


தலையின்


இசைத்தல், அவரும் தம் வழிநடை வருத்தம் தீர, இசை யிலே மனஞ்செலுத்தி மகிழ்ந்தார் போலத்,தலைவியும் தலைவனுடன் இன்புற்று இனிது மகிழ்பவளாவாள் என்ப தாம். 'வடுகர்' அந்நாளில் ஆறலைப் போராய் இருந்தனர் போலும். அதுபற்றியே அவராலும் துயரம் ஏதும் கொள் ளாதே இனிது வழிகடந்து சென்று என்றனர்.

கணந்துள்- நீர்ப் பறவை இனத்துள் ஒன்று.'எந்நில. மருங்கிற் பூவும் புள்ளும்' (தொல். பொருள் 19) என்னும் விதிக்கு இணங்கப் பாலைக்கண் நெய்தற் கருப்பொருளாகிய கணந்துள் பயின்று வந்ததும் காண்க.

இறைச்சி : கணந்துட் பறவையது புலம்புங் குரலோசை யானது, வழிநடை வருத்தந் தீரக் கோடியர் மீட்டும் யாழிசையிற் கலந்து விடுவதுபோலத் தலைவியின் புலம்பல் எல்லாம், தலைவன் அளிக்கும் இன்பத்திலே இணைந்து தலைவியை மகிழ்விக்கும் என்பதாம். மெய்ப்பாடு தோழியின் உள்ளத்தே தோன்றிய உவகை. பயன்: தலைவிக்கும்

அவளுக்கும் உண்டாகும் மகிழ்ச்சி.

213. புனம் காவலும் நுமதோ?

·

பாடியவர் : கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார். திணை: குறிஞ்சி. துறை : மதி உடன்படுக்கும் தலைமகன் சொல்லியது.

[(து.வி.) இயற்கைப் புணர்ச்சி பெற்றதன்பின்னர், ஒருநாள், தலைமகளும் தோழியும் ஓரிடத்தே இருப்பதனைக் கண்டானாகிய தலைமகனின் உள்ளத்திலே வேட்கை பெருகு கின்றது. ஆயினும், தோழிக்குத் தம் உறவை வெளிப்படக் காட்டவும் துணியானாய், அவர்பால் வரும் புதியவன் ஒருவன் போல வந்து, அவரோடு உறவுடையான்போல் இவ்வாறு வினவுகின்றான். தன் கருத்தோடு அவர் கருத்தையும் ஒன்றுபடுத்து உணரக் கூறுதலின் 'மதி உடன்படுத்தல்' ஆயிற்று.)

அருவி யார்க்கும் பெருவரை நண்ணிக் கன்றுகால் யாத்த மன்றப் பலவின்

வேர்க்கொண்டு தூங்கும் கொடுஞ்சுளைப் பெரும்பழம்

குழவிச் சேதா மாந்தி, அயலது

வேய்பயில் இறும்பின் ஆம்அறல் பருகும்

பெருங்கல் வேலிச் சிறுகுடி யாதுஎனச்

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/42&oldid=1641377" இலிருந்து மீள்விக்கப்பட்டது