213
போர்ப் படலம்
இயல் 102
என்னுடன் போர் புரிந்தவனு வேழன் என்ற
இளவலுக்கு மாவலியன் மறைத்து ாைத்தான்.
படைவீடு புகுந்தடைந்த இளவல் போரில்
பாய்ந்துபொரும் மாவீரன் வலிபு கழ்ந்து, விடைபோலும் மாவலியை விளித்துத் தன்பால்
வெஞ்சமரம் புரிந்தோன் அவ் வேழன் தானே? மிடையாத முனமவனைச் சொல்லக் கேட்ட
மேன்மை எலாம் இவனிடத்தும் விளங்கக் கண்டேன்; அடையாளம் நீயறிவை அறிந்தி ருப்பின்
அன் பன்னக் கறிவிப்பாய் இன்றே என்ருன். 422
பெருங்கனகன் சூழ்மதியால் துணைபோ லிங்குப்
பின் வந்த மாவலியன் உண்மைச் செய்தி தருங்கருத்தொன் றிலனுகி மறைத்துச் சொல்வோன்
'தருக்கொடுநின் னுடன் பொருதோன் வேழன் அல்லன் ; மருங்கிருந்து கண்டுள்ளேன் அவனைப் பல்கால்;
மலையுமிவன் சில குறியால் அவன் போ லுள்ளான்; பெருங்களிற்றின் அனையானுக் கின்று வந்த
பெரியவன்ருன் இணையாமோ?' எனப்ப கர்ந்தான். 423
விடை- காளை மிடையாத-போர் செய்யாத