இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஏதேன் தோட்டத்துப் பாம்பு!
கேட்பவர் உள்ளத்தைப்
பட்டுக் கயிற்று முடிச்சால்
சுருக்கிட்டுத் தொங்கவிடும்
பிளவுபட்ட உன்
தத்துவ நாக்கை
ஆண்டவனாலும்
அறுக்க முடியவில்லை.
நீ -
ஏவாளின் காதுகளில்
இன்னிசை வீணையை
மிழற்றும் போது,
சாபக் கனிகளுக்குக்
கட்டியம் கூறும்
உன் நச்சுப் பற்களைச்
சாமர்த்தியமாக
மறைத்துக் கொள்கிறாய்.
நீ -
பார்வையாலேயே
நஞ்சைக் கொட்டும்
திட்டி விடம்.
உன் -