இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
604
சங்க இலக்கியத்
பட்டினப்பாலையில் கோட்டை மதிலைத் தாக்க எழுந்த களிறு, பூளையொடு உழிஞைப் பூவையும் சூடிச் சென்றதாகக் கூறுவர்.
“வேறுபல் பூளையொடு உழிஞை சூடி”-பட்டின. 235
பிங்கலம் இதனை வெற்றிப்பூ என்று கூறும்[1]. திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளைக் கம்பர் ‘பூளைசூடி’ என்று குறிப்பிடுகின்றார்[2]. மடலேறுவோன் பிற மலர்களோடு பூளைப் பூக்களையும் சூடிக்கொள்வான் என்பர்.
பூளை தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | மானோகிளமைடியே (Monochlamydeae), புல்லி வட்டமும் அல்லிவட்டமும், இணைந்து, ‘பீரியாந்த்’ எனப்படும். |
தாவரக் குடும்பம் | : | அமராண்டேசி (Amarantaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | ஏர்வா (Aerva) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | டொமென்டோசா (tomentosa) |
சங்க இலக்கியப் பெயர் | : | பூளை |
உலக வழக்குப் பெயர் | : | பூளை |
தாவர இயல்பு | : | சிறு புதர்ச் செடி. நேராக நீண்டு வளரும். செடி முழுவதும் நுண்மயிர் அடர்ந்திருக்கும். |
இலை | : | தனியிலை. மாற்றடுக்கில் நீண்டு, அகன்றது. இலை முழுதும் நுண்மயிர் அடர்ந்திருக்கும். 2.5 அங்குல நீளமும் 0.5 அங்குல அகலமும். |