இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
454
சங்க இலக்கியத்
தண்டு | : | அடியில் 8-12 மி.மீ. பருத்து, சதைப் பற்று உள்ளதாக இருக்கும். முல்லைக் கொடியின் அடித்தண்டைக் காட்டிலும் பெரியது. |
கிளைத்தல் | : | குற்றுச் செடியில் அடியிலேயே பல கிளைகள் உண்டாகிப் புதர் போன்றிருக்கும். |
இலை | : | தனி இலை, செதிலற்றது. எதிர் அடுக்கில் கணுவிற்கு இரண்டு இலைகள். இலைக் காம்பு 2-3 மி. மீ. நீளமானது. |
வடிவம் | : | நீள் முட்டை வடிவம், 8-8.5 செ.மீ. X 3-4 செ.மீ. நேர் வடிவம் விளிம்பு கூர் நுனி. சிறகமைப்புள்ள நரம்புகள். |
மஞ்சரி | : | இலைக்கோணத்தில் கிளைத்த நுனி வளராப் பூந்துணர். சைமோஸ்-ஒவ்வொரு சைமிலும் 3 மலர்கள், நடு அரும்பு முதலில் முதிர்ந்து மலரும். |
மலர் | : | அரும்பு 1.5-2 செ.மீ. நீளமானது. தூய வெள்ளை நிறம். |
புல்லி வட்டம் | : | 5 அடியில் இணைந்து, குழல் வடிவாகவும், நுனியில் மெல்லிய பசிய கம்பி போன்றும் திருகிக் காணப்படும். |
அல்லி வட்டம் | : | 5 இதழ்கள் அடியில் இணைந்து, குழல் வடிவாகவும், மேலே இதழ் விரிந்தும் மலரும். சிறந்த நறுமணம் உள்ளது. |
மகரந்த வட்டம் | : | 2 மகரந்தத் தாள்கள் அல்லியொட்டியவை. அல்லியில் அடங்கி இருக்கும் ஒவ்வொரு தாளிலும் இரு மகரந்தப் பைகள் உண்டு. |
சூலக வட்டம் | : | 2 சூலறைகள் உள்ள சூற்பை. ஒவ்வொன்றிலும் 2 தலை கீழ்ச் சூல்கள். |
சூல் தண்டு | : | குட்டையானது. சூல்முடி 2 பிளவானது. |
சூலிலை | : | நீள்வட்டமானது. |