இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை xiii
உரைநடை வளர்ச்சிக்கு உதவிய வேறு பலருடைய பெயர்கள் விட்டுப் போயிருப்பதை நான் உணர்கிறேன். இக்கட்டுரையில் இடம் பெற்றவர்களைப் பொறுத்தவரையில்கூட அவர்கள் எவ்வாறு உரைநடையை வளர்த்தனர் என்று விளக்கமாகக் கூற முடியவில்லை.
இந்தக் குறுகிய கட்டுரையில் இலங்கைத் தமிழர்களும், மலேசியா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களும் தமிழ் உரை நடைக்குச் செய்த நல்ல சேவையைக் குறிப்பிட வேண்டுமானல் இது மேலும் வரம்பு கடந்து விடுமாதலால் அவற்றை இங்கு கூறாமல் விடுகிறேன். அவர்கள் தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு நல்ல தொண்டு செய்துள்ளனர் என்று கூறிக்கொண்டு இதை முடிக்கிறேன்.
-பெ. தூரன்