பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7お தனது முற்பிறப்பும் இப்பிறப்பும் சேரக்கூறிப் பின், 'நீ யார்?' என்று தீவதிலகையை வினவினுள். அவள் தான் இந்திரன் ஏவலால் புத்த பீடிகையைக் காவல் புரியும் செயலேயும் பீடிகையின் பெருமையையும் எடுத் துரைத்தாள். அமுதசுரபியை அடைதல் பின்பு அத் தீவதிலகை மணிமேகலையை நோக்கி, 'இங்காள் புத்தன் அவதரித்த பொன்னுளாகும். வைகாசித் திங்கள் முழுநிலாப்பொழியும் விசாக கன்ன ளாகும். இங்காளில் இங்குள்ள கோமுகிப் பொய்கை யில் அமுதசுரபி என்னும் அரிய தெய்வப் பாத்திரம் வெளிப்படும். அது முன்னைய நாளில் ஆபுத்திரன் கையில் இருந்தது. அது கின் கைக்குக் கிடைக்கும். ஆங்கதில் பெய்த ஆருயிர் மருந்து வாங்குநர் கையகம் வருத்துதல் அல்லது தான்தோலை வில்லாத் தகைமைய தாகும்.” அதன் வரலாற்றைக் காவிரிப்பூம்பட்டினம் சென்று அறவண அடிகள்பால் அறிந்துகொள்க,' என்று சொல்லி, அவளேக் கோமுகிப் பொய்கைக்குக் கூட்டிச் சென்ருள். இருவரும் அக் குளத்தை வலஞ்செய்து கின்றனர். அப்பொழுது அதனின்று எழுந்த அமுத சுரபி,மணிமேகலையின் மலர்க்கரத்தில் வந்து அமர்ந்தது. அமுதசுரபியைப் பெற்ற மணிமேகலை அள வற்ற மகிழ்ச்சியடைந்தாள். புத்தனப் பலவாறு போற்றித் துதித்தாள். அப்பொழுது தீவதிலகை, பசிப் பிணியின் கொடுமையையும் அதனைத் தீர்ப்போரது பெருமையையும் மணிமேகலைக்குக் கூறினுள். இனி நீ உணவளித்து உயிர் கொடுத்தலாகி அறத்தைப்