இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எஸ்.டி. சுந்தரம்
103
::கண்ணே! அதோ பார் நட்சத்திரங்கள் நம்மைக்
- கண்டு கண் சிமிட்டிக் கேலி செய்கின்றன.
- வா கண்ணே! ஏழடுக்கு உப்பரிகையில் எழிலரசியாக
- வீற்றிருப்பாய்! அங்கே தங்கப்படி கட்டிய
- பன்னிர்க் குளமே நிர்மாணிப்பேன்! அதில்
- மின்னும் அன்னம்போல் நீந்தி, உன் பொன்னு
- டல் இன்பமுறும் சீனத்துச் சல்லாக்கள் உன்
- செந்தாமரை மேனியில் சிலுசிலுக்கும்...!
- யவனத்துச் சிற்பங்கள் உன் காட்சிக்கு மகிழ்
- ஆட்டும்! நம் நாட்டு நீலப்பட்டாடைகள் உன்
- பருவ மேனியில் பளபளக்கும் எனக்காகவே
- நீ பிறந்தாய்! உனக்காகவே நான் வளர்ந்தேன்.
மேக :உஹீம். எல்லாம் வீண் கனவு என்னைப் பார்த்த
- மறுகணமே வேந்தர் உங்களை நாடு கடத்தச்
- சொல்லுவார்! -
உதய :சந்தோஷமாக ஏற்பேன். காதலுக்காகச் சோழ
- சாம்ராஜ்யத்தையே இழக்கத் துணிந்த பெருமை
- எனக்கு வரும்! நாம் தம்பதிகளாவோம். நானில
- மெங்கும் சுற்றுவோம். நல்ல கலை வளர்ப்போம்.
- வா கண்ணே! .
மேக :முடியாது அரசே முடிவு செய்து விட்டேன்!
உதய :ஐயோ மேகலா புது வீட்டின் முதல் வாசலையே
- முடிவிட்டதுபோல், பருவத்தின் துவக்கத்திலேயே
- துறவியாவது இயலாத காரியம்! இதோ பார்!
- என் பொறுமை மீறுமுன் நீயாகவே புறப்பட்டு
- விடு. இல்லையேல் என் செல்வத்தை எப்படிக்
- கொண்டு போக வேண்டுமென்று எனக்குத்
- தெரியும் புறப்படு மேகலா.
மேக :மறந்து விடுங்கள் அரசே!
உதய :மேகலா
மேக :கோபமா