தமிழ்ச் செல்வம் இ 37
கருவி, உலகு, நுகர்ச்சிகளாகிய மாயையும் துணை யாகும். இம்மாயையின் காரியமாகிய உடல் முதலியன மலவிருள்களைச் சிறிது நீக்கி உயிரறிவு தொழிற்படுதற்குரிய விளக்கத்தைத் தருகின்றன. இந்த மாயை சுத்தமாயை, அசுத்தமாயை என இருவகைப் படும். இனி, இந்த உயிர்கள் நல்வினை தீவினை யென்ற இரண்டினையும் செய்தற்கு ஏதுவாக இருப்பது கன்மம். இந்த மலமாயை கன்மங்களோடு கூடி நின்று இவற்றைத் தொழிற்படுத்தி உயிர்கள் கட்டினின்றும் நீங்குதற்கேற்ற செவ்வி பெறுவிக்கும் அருளாற்றலும் உண்டு. அது திரோதானம் என்று வழங்கும். திரோதானம் மறைப்பது, மல முதலிய வற்றோடு கலந்து நின்று மறைத்தலைச் செய்விப்பது பற்றி இப்பெயர் உண்டாயிற்று. இவ்வாற்றல் மலம், சுத்தமாயை, அசுத்தமாயை, கன்மம், திரோதம் எனக் கட்டு ஐந்தாதலைக் காணலாம்.
இந்த ஐந்தையும், சிவஞான முனிவர், “ஒன்றாகி அழிவின்றிப் பலவாற்றலுடைத்தாய்ச் - செம்புறுமா சென்னத்
தொன்றாகி அருள்விளைவில் நீங்கும் இருள்
மலத்துடன் அத்தொடக்குநீப்ப மின்தாவும் உடலாதி.நல்கும் இருமாயை
இருவினைகட்கேது . . என்றோது கருமம் இவை நிகழ்த்துதிரோ தமும் என்னும் ஐவகைப்பாசத்தை -
என்று உரைத்தருளுகின்றார்.