இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வித்தியாதரர் என்ற அறிவாளிக்கு வித்தியாவதி என்ற பெண் ஒருத்தி இருந்தாள். அவர் அந்தப் பெண்ணை மிகவும் செல்லமாக வளர்த்து வந்தார். வித்தியாவதி மிகவும் அழகுடையவள். அவளைப் போன்ற அழகுடையவள் உலகத்திலேயே இரண்டு மூன்று பேர்களே இருப்பார்கள்.