இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
55
எடுத்துக் கொண்டு, “இவற்றைக் கண்டால் நம்முடைய மாமியார் நம்மைத் திட்டமாட்டாள். நம்மை ஏற்றுக் கொள்வாள்” என்று எண்ணி, நகைகளையும் பணத்தையும் பிள்ளையாரோடு எடுத்துக் கொண்டு வீட்டிற்குப் போனாள்.
“அத்தை, அத்தை பார்த்தீர்களா, இந்த ஆச்சரியத்தை! எ.ன்னுடைய பிள்ளையாரைக் கட்டை என்று சொன்னீர்களே, இவர் எனக்கு இந்தப் பணத்தையும் நகைகளையும் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். பாருங்கள்; பிள்ளையாரை நம்பியதால் எனக்குக் கிடைத்த இலாபம் இது” என்று சொன்னாள்.
அவளுடைய மாமியாருக்கும், பணத்தையும் நகைகளையும் கண்ட பிறகு மருமகள் மீதிருந்த