இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வளநாட்டை ஒர் அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு இரண்டு மக்கள் இருந்தார்கள். மூத்தவன் பெயர் அரியநாதன். இளையவன் பெயர் வடுகநாதன்.
அரியநாதனும் வடுகநாதனும் கூடப்பிறந்தவர்களே தவிர, ஒருவருக்கொருவர் பெரும் பகையாயிருந்தனர். சிறு வயது முதலே எதையெடுத்தாலும் இருவருக்கும் போராட்டம்தான்.
இருவருக்கும் சண்டை வரக்கூடாதென்பதற்காக அரசர் எந்தப் பொருளை வாங்கினாலும் இருவருக்கும் சமமாகவே வாங்குவார். அப்படியிருந்தும் அவர்கள் சண்டையிட்டுக் கொள்வார்கள்.
ஒரு நாள் அரசர் அவையில் இருக்கும்போது, அயல் நாட்டிலிருந்து வந்த தூதுவன் ஒருவன்,சுவை மிகுந்த மூன்று மாங்கனிகளைக் கொண்டு வந்தான். அரசர் தமக்கு என்று ஒன்றை வைத்துவிட்டு, அரியநாதனுக்கும் வடுகநாதனுக்கும் ஆளுக்கொரு கனியைக் கொடுத்தார்
ந.சி.II-1