இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
விந்தையிலும் விந்தை!
உலகிற்பெரும் விந்தை!
சிந்தை யள்ளும் வண்ணம்
செய்து வைத்த விந்தை!
பார்க்கப் பார்க்க வியப்பு
பளிங்குக் கல்லின் பதிப்பு
கற்ப னையின் ஆற்றல்
கவிதை யான தோற்றம்!
மும்தாஜ் என்னும் அரசி
மூடி விட்டாள் கண்ணை!
தாஜ் மகாலாய் இன்றும்
நிலைத்து வாழு கின்றாள்!