இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வெட்டிப் போட்டு மண்ணை
விதை விதைக்க வேண்டும்
எட்டு நாளில் முளையே
எட்டிப் பார்க்கும் வெளியே!
எருவும் நீரும் இட்டுப்
பிள்ளை போலக் காத்தால்
பெரிய செடி யாகும்
பின்பு பூத்துக் குலுங்கும்!
ஈயும் வண்டும் சேரப்
பூவும் பிஞ்சாய் மாறும்
காயும் பழமும் தின்று
நோயில் லாமல் வாழ்வோம்!