பக்கம்:பட்டிப் பறவைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓடத்தின் பாய்மரத்திலே விரிந்து நின்ற பாய், “நானல்லவா இத்தனை பெரிய ஓடத்தைத் தள்ளுகிறேன் ” என்று செருக்கோடு வீங்கிப் புடைத்துக்கொண்டு கூறிற்று.

“உனது பெருமையே பெருமை!” என்று கூறிவிட்டுக் காற்றுத்தேவன் நின்று விட்டான்.

வலியிழந்து உயிரிழந்து வீழ்ந்தது பாய்.



பழுக்கக் காய்ந்த இரும்பூசியைப் பாய்ச்சித் தொளையிடுகிறவனை வேய்ங்குழல் வைது சாபம் கொடுக்கவில்லை.


அத்துன்பத்தைத் தந்து இசையென்னும் இன்பம் பொழியச் செய்கிறான் என்பதை அது உணர்ந்துள்ளது.

41